Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’’மூலிகை மைசூர்ப் பாக்...’’பொய்யான விளம்பரம் செய்த கடைக்கு சீல்!

Webdunia
புதன், 8 ஜூலை 2020 (17:30 IST)
கோவை மாவட்டத்தில் ஒரே நாளில் கொரோவை குணமாக்கும் என்று மூலிகை மைசூர்பாக் விற்பனை செய்து வந்த கடைக்கு கோவை உணவு பாதுக்காப்புத்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.

கொரொனாவால் மக்கள்  பலர் வாழ்வாதாரம் இழந்துள்ளனர். பல தொழில்கள் நலிவடைந்துள்ளது. இருப்பினும் சிலர் அதை தங்கள் சுயநலத்திற்காகப் பயன்படுத்தி வருவதும் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் கோவை மாவட்டம் தொட்டிபாளையம் அருகே உள்ள பகுதியில் செயப்பட்டு வரும் ஒரு  இனிப்புக் கடையில் எங்கள் கடையில் உள்ள மூலிக மைசூர்ப்  சாப்பிட்டால் ஒரெ நாளில் கொரொனா குணமடையும் என கூறி விற்பனை செய்துள்ளார்.

இதுகுறித்து தகவல் அறிந்த கோவை உணவுப் பாதுக்காப்புத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்குச் சென்று 120 கிலோ மைசூர்ப் பாக்குகளை பறிமுதல் செய்தனர். அதன்பின் 1 லட்ச ரூபாய் மதிப்புள்ள அக்கடைக்கு அதிகாரிகள் சீழ் வைத்தனர்.

குறிப்பாக இந்த மூலிகை மைசூர்பாக் கடைக்கு எந்த அனுமதியும் என்பதற்காகவும் பொய்யான விளம்பரம்  செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments