Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சென்னை திரும்பும் தென்மாவட்ட மக்கள்.. பெருங்களத்தூர் அருகே ஊர்ந்து செல்லும் வாகனங்கள்..!

சென்னை திரும்பும் தென்மாவட்ட மக்கள்.. பெருங்களத்தூர் அருகே ஊர்ந்து செல்லும் வாகனங்கள்..!

Siva

, வியாழன், 18 ஜனவரி 2024 (06:32 IST)
பொங்கல் விடுமுறை முடிந்து தென் மாவட்ட மக்கள் சென்னை திரும்பி கொண்டு இருப்பதை அடுத்து பெருங்களத்தூர், ஊரப்பாக்கம், தாம்பரம் போன்ற பகுதிகளில் வாகனங்கள் ஊர்ந்து செல்வதாக தகவல் வெளியாகியுள்ளது

 பொங்கல் விடுமுறையாக 13ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை 5 நாட்கள் விடுமுறை இருந்த நிலையில்  இன்று முதல் வழக்கமான பணிகள் ஆரம்பமாக உள்ளன. இதனை அடுத்து நேற்று இரவு தென் மாவட்ட மக்கள் சென்னை நோக்கி படையெடுத்து உள்ளனர்.

இந்த நிலையில் வாகன நெரிசல் ஏற்பட்டு ஊரப்பாக்கம் பெருங்களத்தூர் தாம்பரம் போன்ற பகுதிகளில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக வாகனங்கள் ஊர்ந்து செல்வதாகவும் போக்குவரத்தை காவல்துறையினர் சரி செய்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஒரே நேரத்தில் லட்சக்கணக்கான மக்கள் சென்னைக்கு திரும்பி வருவதால் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவும் இதை சரியான முறையில் காவல்துறையினர் கையாண்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ராமர் கோவிலுக்கு குடும்பத்துடன் செல்வேன்: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்!