Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல்: வாகன ஓட்டிகள் அவதி

Webdunia
செவ்வாய், 24 நவம்பர் 2020 (20:17 IST)
சென்னையில் பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல்:
சென்னையில் பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருவதாக தகவல் வெளிவந்துள்ளது. குறிப்பாக எழும்பூர், வேப்பேரி, பூவிருந்தவல்லி, நுங்கம்பாக்கம், கீழ்ப்பாக்கம் ஆகிய பகுதிகளில் அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
 
மேலும் சென்னை விமான நிலையத்தில் இருந்து கிண்டி நோக்கி செல்லும் சாலையிலும் கடும் போக்குவரத்து நெரிசல் உள்ளதாகவும், கனமழை காரணமாக சென்னையில் சாலைகளில் நீர் தேங்கியுள்ளதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவ்ந்துள்ளது.
 
மேலும் சென்னை அண்ணாசாலை, தேனாம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் சாலையில் மழைநீர் அதிகம் தேங்கியுள்ளதால் அலுவலகங்களை விட்டு வீடு செல்வோர் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் சென்னையில் தொடர்ந்து விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது என்பதால் இன்னும் ஒருசில நாட்களுக்கு இதே நிலை நீடிக்கும் என தெரிகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

விஜயின் த.வெ.க மாநாட்டில் பங்கேற்பீர்களா.? சீமான் சொன்ன பளீச் பதில்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments