Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொடர் விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் மக்கள்.. கடும் போக்குவரத்து நெரிசல்

Webdunia
புதன், 25 அக்டோபர் 2023 (07:51 IST)
ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை, விஜயதசமி ஆகிய தொடர் விடுமுறை நாட்கள் முடிவடைந்து தற்போது பொதுமக்கள் சொந்த ஊரிலிருந்து சென்னை திரும்பி கொண்டிருப்பதன் காரணமாக கோயம்பேடு பேருந்து நிலையம், சென்ட்ரல் எழும்பூர் ரயில் நிலையங்களில் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக உள்ளது. 
 
மேலும் சென்னையின் புறநகர் பகுதிகளில் ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து கொண்டிருப்பதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் இந்த போக்குவரத்து நெரிசலை சரி செய்யும் பணியில் போக்குவரத்து காவல்துறையினர் ஈடுபட்டு இருப்பதாக கூறப்படுகிறது. 
 
குறிப்பாக சென்னை தாம்பரம் பகுதியில் கடும் போக்குவரத்தின நெரிசல் ஏற்பட்டிருப்பதாகவும் இதன் காரணமாக சாலையில் வாகனங்கள் ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. 
 
மேலும் பள்ளி கல்லூரிகள் விடுமுறை முடிந்து இன்று திறக்கப்படுவதை அடுத்து மாணவ மாணவிகளும் அதிக அளவில் பேருந்துகள் மற்றும் வாகனங்களில் பயணம் செய்து வருகின்றனர் 
 
சென்னை  கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று ஒரே நாளில் 2 முறை முதல்வர் ஸ்டாலினை சந்தித்த ஓபிஎஸ்.. திமுகவில் இணைகிறாரா?

திடீரென வந்த பிரசவ வலி.. பெங்களூரு ரயில் நிலைய பிளாட்பாரத்தில் குழந்தை பெற்ற பெண்..!

8ஆம் வகுப்பு மாணவியை திருமணம் செய்த 40 வயது நபர்.. ஏற்கனவே திருமணமானவர்.. 5 பேர் கைது..!

தவெக செயலி.. ஒரே நாளில் 3 லட்சம் புதிய உறுப்பினர்கள்.. கட்சியில் குவியும் பெண்கள்..!

எடப்பாடி ஒழிக... குருமூர்த்தி ஒழிக.... அண்ணாமலை ஒழிக... ஓபிஎஸ் கூட்டத்தில் ஆதரவாளர்கள் கோஷம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments