Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கோவையில் 8 வினாடிகள் நில அதிர்வா? பொதுமக்கள் அச்சம்

கோவையில் 8 வினாடிகள் நில அதிர்வா? பொதுமக்கள் அச்சம்
, புதன், 3 அக்டோபர் 2018 (23:14 IST)
கோவை பகுதியில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வரும் நிலையில் சற்றுமுன்னர் கோவை அன்னூர் பகுதியில் பலத்த சத்தத்துடன் இடி இடித்தது. இதனால் சுமார் 8 வினாடிகள் பூமியே அதிர்ந்தது.

இடியினால் ஏற்பட்ட இந்த அதிர்வை நில அதிர்வு என நினைத்து பொதுமக்கள் பலர் வீட்டை விட்டு வெளியே வந்தனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில் அன்னூர் பகுதியில் ஏற்பட்டது நில அதிர்வு இல்லை என்றும், இடியினால் அந்த பகுதி அதிர்ந்துள்ளது என்பதும் தெரிய வந்தது. இதனையடுத்து பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்.


 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வாலிபரை கடத்தி மைனர் பெண்ணுக்கு திருமணம் செய்து வைத்த பெற்றோர்