Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிற்பகல் 1 மணி வரை சென்னை உள்பட 16 மாவட்டங்களில் கனமழை: வானிலை எச்சரிக்கை..!

Mahendran
செவ்வாய், 15 அக்டோபர் 2024 (11:02 IST)
பிற்பகல் ஒரு மணி வரை சென்னை உள்பட தமிழகத்தின் 16 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ள நிலையில், வடகிழக்கு பருவமழையும் தொடங்கி விட்டதால், தமிழகத்தின் பல பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்து வருகிறது.

அந்த வகையில், இன்று பிற்பகல் ஒரு மணி வரை சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, வேலூர், கடலூர், விழுப்புரம், மற்றும் புதுச்சேரியில் இடி மின்னலுடன் கூடிய மிதமான முதல் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

அதேபோல், அரியலூர், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்யுங்கள்: தொண்டர்களுக்கு செல்வப்பெருந்தகை வேண்டுகோள்

போதிய பயணிகள் இல்லை: சென்னையில் இன்று 8 விமானங்கள் ரத்து!

9 வயது சிறுமியை வன்கொடுமை செய்து சாலையில் வீசிய கொடூரம்! - மகாராஷ்டிராவில் அதிர்ச்சி!

தொடர்ந்து மழை பெய்தாலும் செம்பரம்பாக்கம் ஏரியால் பாதிப்பு இருக்காது-எரிக்கு நீர்வரத்து குறைவாக வருவதாக அதிகாரிகள் தகவல்!

நாகை இலங்கை காங்கேசன்துறை இடையேயான பயணிகள் கப்பல் போக்குவரத்து காற்றழுத்த தாழ்வு நிலை எதிரொலியாக இரண்டு நாட்கள் ரத்து-கப்பல் நிர்வாகம் அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments