Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை அண்ணா நகரில் ஒரு மணி நேரத்தில் 9 செ.மீ. மழை: பொதுமக்கள் அவதி..!

Siva
வியாழன், 31 அக்டோபர் 2024 (09:49 IST)
நேற்று சென்னை அண்ணாநகரில் ஒரு மணி நேரத்தில் 9 சென்டிமீட்டர் மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் தேங்கி இருப்பதாகவும், தீபாவளி தினத்தில் பொதுமக்கள் பட்டாசு வெடிக்க முடியாமல் அவதிப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
கிழக்கு திசை காற்று நேற்று வீசத் தொடங்கியதால், சென்னையின் பல பகுதிகளில் கனமழை பெய்தது. குறிப்பாக, அண்ணா நகரில் பிற்பகல் 12 மணி முதல் ஒரு மணி வரை, ஒரு மணி நேரத்தில் 9 சென்டிமீட்டர் மழை பதிவானது. 
 
கொளத்தூர், அமைந்தகரை, அம்பத்தூர் ஆகிய பகுதிகளிலும் 5 முதல் 6 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. மேலும் கே.கே.நகர், கிண்டி, கோயம்பேடு உள்ளிட்ட பகுதிகளில் கனமழை காரணமாக சாலைகளில் நீர் தேங்கி, வாகனங்கள் மெதுவாக நகர்கின்றன. இதனால், தீபாவளிக்கு ஊருக்கு செல்லும் பயணிகள் கடும் அவதி அடைந்தனர். 
 
மேலும் கனமழை காரணமாக ஜவுளிக்கடைகள் உள்பட பல்வேறு கடைகளில் கடைசி நேர தீபாவளி விற்பனை பாதிக்கப்பட்டதாகவும், குறிப்பாக பட்டாசு விற்பனையில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
 
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தேமுதிகவோடு கூட்டணி வைப்பவர்களுக்கு வெற்றி! யாருடன் கூட்டணி? - தேமுதிக பிரேமலதா விஜயகாந்த் அறிவிப்பு!

வாக்குரிமை மட்டுமல்ல.. ரேசன் அட்டையையும் இழக்க நேரிடும்: ராகுல் காந்தி எச்சரிக்கை..!

வரதட்சணை கொடுமைக்காக செவிலியர் உயிருடன் எரிப்பு.. கணவர் உள்பட 6 பேர் தலைமறைவு..!

அமைச்சர், எம்.எல்.ஏவை ஓட ஓட அடித்து விரட்டிய பொதுமக்கள்.. உயிரை காப்பாற்ற ஓட்டம்..!

சமூகநீதின்னா என்னான்னு பீகார் பயணத்துக்கு பிறகாவது புரியட்டும்! - மு.க.ஸ்டாலின் குறித்து அன்புமணி!

அடுத்த கட்டுரையில்
Show comments