Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று இரவில் கனமழை பெய்யும்: 22 மாவட்டங்களுக்கு வானிலை எச்சரிக்கை..!

Siva
வியாழன், 28 நவம்பர் 2024 (16:41 IST)
தமிழகத்தில் உள்ள 22 மாவட்டங்களில் இன்று இரவு கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
 
வங்கக்கடலில் உருவான ஃபெங்கல் புயல் மெதுவாக தமிழகத்தை நோக்கி நகர்ந்து வருவதாகவும், இதனால் சென்னை உள்பட கடலோர மாவட்டங்களிலும், டெல்டா மற்றும் தென் மாவட்டங்களிலும் கன மழை பெய்யும் என ஏற்கனவே வானிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
 
இந்த நிலையில், இன்று இரவு தமிழகத்தில் உள்ள 22 மாவட்டங்களில், அதாவது சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர், மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி, திருவண்ணாமலை, பெரம்பலூர், திருச்சி, தூத்துக்குடி, மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை முதல் கன மழை வரை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. 
 
இதனைத் தொடர்ந்து, மேற்கண்ட 22 மாவட்டங்களில் உள்ள பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சோதனை ஓட்டம் வெற்றி! டிசம்பரில் வருகிறது புதிய மெட்ரோ ரயில் சேவை! - சென்னை மக்களுக்கு ஹேப்பி நியூஸ்!

அன்றைக்கு மட்டும் ஐபிஎல் போட்டி நடத்தாதீங்க! - ஐபிஎல் நிர்வாகத்திற்கு காவல்துறை வேண்டுகோள்!

அதிரடியில் இறங்கிய காவல்துறை! ரவுடி ஐகோர்ட் மகாராஜாவை சுட்டுப் பிடித்த போலீஸ்! - சென்னையில் பரபரப்பு!

முன்னாள் எம்.எல்.ஏ தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை.. அதிர்ச்சி சம்பவம்..!

குடும்பத்துடன் மது குடிக்கும் போராட்டம்.. தவெக அறிவிப்பால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments