Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

டெல்டா, தென் மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை.. பொதுமக்களுக்கு எச்சரிக்கை..!

Advertiesment
டெல்டா, தென் மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை.. பொதுமக்களுக்கு எச்சரிக்கை..!
, வியாழன், 14 டிசம்பர் 2023 (07:30 IST)
அரபிக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு காரணமாகவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாகவும் டெல்டா மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் சமீபத்தில் புயல் காரணமாக கன மழை பெய்து பெரு வெள்ளம் ஏற்பட்டது என்பது இதனால் பெரும் சேதம் ஏற்பட்டது என்பதையும் பார்த்தோம்.

இந்த நிலையில் ஒரு பக்கம் சென்னை உள்பட நான்கு மாவட்டங்களில் மீட்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில் அரபிக் கடலில் தோன்றிய காற்றழுத்த தாழ்வு காரணமாக  டெல்டா மாவட்டங்களிலும் மற்றும் தென் மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்பு என அறிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக  நீலகிரி, கோயம்புத்தூர்,  திருப்பூர்,திண்டுக்கல், தேனி, விருதுநகர், மதுரை, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று எனவே மேற்கண்ட மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரூ.6000 மட்டுமல்ல.. கூடுதல் நிவாரணம் வழங்கவும் திட்டம்.. தமிழக அரசு தீவிர ஆலோசனை..!