Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொட்டும் மழை.. 20 மணி நேரத்திற்கும் மேலாக தரிசனத்திற்கு காத்திருக்கும் திருப்பதி பக்தர்கள்!

Prasanth Karthick
சனி, 28 டிசம்பர் 2024 (10:31 IST)

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ள நிலையில் தரிசனத்திற்காக 20 மணி நேரத்திற்கும் மேலாக வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

 

 

திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி விழா நடந்து வரும் நிலையில், பள்ளி விடுமுறை, ஆண்டு இறுதி என்பதால் ஏராளமான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். நேற்று வெள்ளிக்கிழமை அன்றே பக்தர்கள் பலர் குவிந்ததால் இலவச தரிசன வரிசையில் செல்லும் பக்தர்கள் சுமார் 20 மணி நேரம் வரை காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

 

இன்று சனிக்கிழமை என்பதால் விடியற்காலையிலேயே ஏராளமான பக்தர்கள் திருப்பதியில் குவிந்தனர். திருப்பதியில் அவ்வபோது மழை பெய்து வரும் நிலையில், குளிரும் வாட்டி வருகிறது. ஆனால் பக்தர்கள் அதையும் தாண்டி மணிக்கணக்கில் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர். 

 

நேற்று 66,715 பக்தர்கள் சாமி தரிசனம் செய்த நிலையில், 24,503 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தியுள்ளனர். உண்டியல் வசூல் ரூ.4.06 கோடியாக வசூலாகியுள்ளது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நான் கடவுளை நம்பினேன்.. நீங்கள் டிஜிட்டலை நம்பினீர்கள்.. சுந்தர் பிச்சையுடன் படித்த துறவி பேச்சு..!

பகவத் கீதையை கையால் எழுதி சாதனை.. மனைவியுடன் பாஜக நிர்வாகி செய்த சாதனை..!

போக்குவரத்து போலீஸ்' பெயரில் SMS வருகிறதா? புதுவகை சைபர் மோசடி.. உஷாராக இருக்க காவல்துறை எச்சரிக்கை..!

டேட்டிங் செயலி மூலம் பெண் மருத்துவருடன் நட்பு.. அந்தரங்க புகைப்படம் எடுத்து மிரட்டிய இளைஞர்..!

காந்தம் ஏற்றுமதிக்கு சீனா தடை.. காந்தம் தயாரிக்க இந்தியா முடிவு.. ரூ.1000 கோடி முதலீடு..!

அடுத்த கட்டுரையில்
Show comments