Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தீபாவளி வரை கனமழை தான்: வானிலை அறிவிப்பால் வியாபாரிகள் அதிர்ச்சி

rain
, திங்கள், 17 அக்டோபர் 2022 (18:21 IST)
தீபாவளி வரை கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதால் தீபாவளி வியாபாரம் பாதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக வியாபாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
 
கடந்த சில நாட்களாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் சில பகுதிகளிலும் மழை பெய்து வருகின்றது என்பதை பார்த்து வருகிறோம்
 
இந்த நிலையில் அடுத்த 5 நாட்களுக்கு இன்று முதல் 22-ம் தேதி வரை தமிழகத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்யும் என்றும் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
 
அக்டோபர் 24ஆம் தேதி தீபாவளி பண்டிகையை கொண்டாட இருக்கும் நிலையில் தீபாவளி வியாபாரம் மழையால் பாதிக்கப்பட அதிக வாய்ப்பு இருப்பதாக வியாபாரிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஒற்றுமை நடைப்பயணத்தை ராகுல் காந்தி உடனடியாக நிறுத்த வேண்டும்: காங்கிரஸ் எம்.பி.