Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மீண்டும் டெல்டா பகுதியில் கனமழை: பள்ளிகள் விடுமுறை

மீண்டும் டெல்டா பகுதியில் கனமழை: பள்ளிகள் விடுமுறை
, செவ்வாய், 4 டிசம்பர் 2018 (07:46 IST)
கஜா புயல் காரணமாக சிதைந்து போயிருக்கும் டெல்டா மாவட்டங்களின் சில பகுதிகளில் மீண்டும் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்றிரவு முதல் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக புதுகோட்டை மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை என அம்மாவட்டத்தின் ஆட்சியர் கணேஷ் அறிவித்துள்ளார்.

அதேபோல் புதுவை மாநிலத்தில் உள்ள காரைக்கால் மாவட்டத்திலும் கனமழை பெய்து வருவதால் அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக காரைக்கால் பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை என புதுவை அரசு அறிவித்துள்ளது.

webdunia
மேலும்  நாகப்பட்டினம் மாவட்டத்தில் கஜா புயல் சீரமைப்பு பணிகள் நடக்கும் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை என் அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அடுத்த மாதம் முதல் இந்த டெபிட்-கிரெடிட் கார்ட் எல்லாம் செல்லாது!...