Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

10 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழை; வானிலை ஆய்வு மையம் தகவல்..!

10 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழை; வானிலை ஆய்வு மையம் தகவல்..!
, புதன், 8 நவம்பர் 2023 (07:25 IST)
இன்று காலை 10 மணி வரை தமிழகத்தில் உள்ள 10 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  

வடகிழக்கு பருவமழை மற்றும் காற்றின் கீழ் அடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.

மேலும் இன்றும் நாளையும் தமிழகம் முழுவதும் பரவலாக கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்று நேற்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து இருந்தது.

இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, குமரி, நெல்லை, தூத்துக்குடி ஆகிய 10 மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை கனமழைக்கு வாய்ப்பு என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  

மேற்கண்ட 10 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் அந்தந்த மாவட்டங்களில் உள்ள நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சென்னையில் திடீரென தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை.. பெரும் பரபரப்பு..!