Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று இரவு 10 மாவட்டங்களில் கனமழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

Webdunia
வியாழன், 19 அக்டோபர் 2023 (16:54 IST)
தமிழகத்தில் இன்று இரவு 10 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தென் மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
கடந்த சில நாட்களாக சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். 
 
அந்த வகையில்  இன்னும் மூன்று மணி நேரத்தில் தமிழகத்தில் உள்ள 10 மாவட்டங்களில் அதாவது கடலூர், அரியலூர், விழுப்புரம், கள்ளகுறிச்சி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, நீலகிரி, தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய பகுதிகளில் மிதமான மழை முதல் கனமழை வரையும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  
 
மேலும் வடகிழக்கு பருவமழை இன்னும் ஒரு சில நாட்களில் தொடங்க இருக்கும் நிலையில் இனி தொடர்ச்சியாக மழை பெய்யும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காதலிக்க மறுத்த ஆசிரியை! கொன்று தாலிக் கட்டி செல்ஃபி எடுத்த கொடூரன்!

11.50 லட்சம் சாதாரண மீட்டர்கள் வாங்கும் பணியை மின் வாரியம்.. ஸ்மார்ட் மீட்டர் திட்டம் என்ன ஆச்சு?

வலது காலுக்கு பதில் இடது காலில் ஆபரேஷன்.. விழுப்புரம் அரசு மருத்துவமனையில் பரபரப்பு..!

நாளை குடமுழுக்கு விழா.. இன்று மதியம் வரை மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி: அமைச்சர் சேகர்பாபு

அமெரிக்க அரசியலில் புதிய அத்தியாயம்: 'அமெரிக்கா கட்சி' உதயம் - டிரம்ப்புக்கு எதிராக களமிறங்கும் எலான்

அடுத்த கட்டுரையில்
Show comments