Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் கனமழை....வானிலை ஆய்வு மையம்

Webdunia
செவ்வாய், 29 ஜூன் 2021 (20:32 IST)
தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக  தென்மாவட்டங்களில் அடுத்த 5 நாட்கள் மிதமான மழைப் பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளதாவது:

தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக தென்மாவட்டங்கள் மற்றும் அதன் உள் மாவட்டங்களில் இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமானதுவரை மழை பெய்ய வாய்ப்புள்ளது எனத் தெரிவித்துள்ளது.

மேலும்,  நாளை, தென்காசி, திண்டுக்கல், தேனி, கோவை, நீலகிரி உள்ளிட்ட மேற்குத் தொடர்ச்சி மலையொட்டிய பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், சென்னையில்  அடுத்த 2 நாட்கள் மேகமூட்டத்துடன் வானம் இருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.

மேலும் அடுத்த ஜூலை 1, 2 ஆம் தேதிகளில் ராணிப்பேட்டை, வேலூர், தருமபுரி, திருவண்ணாமலை , சேலம் ஆகிய மாவட்டங்களிலும்,   3 ஆம் தேதி கள்ளக்குறிச்சி, பெரம்பலூர்,அரியலூர் போன்ற மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு மருத்துவமனைக்கு 300 லிட்டர் தாய்ப்பால் வழங்கிய திருச்சி பெண்.. சாதனை புத்தகத்தில் இடம்..!

பீகார் மக்களுக்கு தமிழகத்தில் வாக்குரிமை தவறில்லை: டிடிவி தினகரன்

8 மாவட்டங்களை வெளுக்கப்போகும் கனமழை! எந்தெந்த மாவட்டங்களில்?

தொடர் ஏற்றத்தில் தங்கம், வெள்ளி விலை.. சென்னையில் இன்று ஒரு சவரன் எவ்வளவு?

வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தொடர்ந்து வெளியேற்றம்.. இந்திய பங்குச்சந்தை மீண்டும் சரிவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments