Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் இடியுடன் கூடிய மழை: சாலைகளில் மழைநீர்!

Webdunia
வெள்ளி, 6 நவம்பர் 2020 (08:05 IST)
சென்னையின் பல இடங்களில் இன்று அதிகாலை இடியுடன் கூடிய மழை பெய்தது. இதனை அடுத்து சாலைகளில் மீண்டும் மழைநீர் தேங்கி உள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது 
 
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது என்பது தெரிந்தது. சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளிலும் கனமழை முதல் மிதமான மழை வரை பெய்து வருகிறது. இந்த மழை காரணமாக நீர் தேக்கங்களில் நீர் வரத்து அதிகரித்து உள்ளது
 
இந்த நிலையில் தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு சென்னை உள்பட ஒருசில மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதன்படி இன்று அதிகாலை முதல் சென்னையின் முக்கிய இடங்களில் மழை பெய்து வருவதாகவும் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்து வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. குறிப்பாக சென்னையில் வடபழனி, கோயம்பேடு, அண்ணாநகர் பகுதியில் நல்ல மழை பெய்துள்ளது 
 
மேலும் அடுத்த இரண்டு நாட்களில் 12 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரூ.8.60 கோடி குருதிப்பணம்.. ஏமன் மரண தண்டனையில் இருந்து காப்பாற்ற கடைசி முயற்சி..!

முதல்வரையே தடுத்த காவலர்கள்.. சுவர் ஏறி குதித்து சென்று முதல்வர்.. செய்வதறியாது இருந்த அதிகாரிகள்..!

கழிவறையை சுத்தம் செய்த மாணவர்கள்..! விளம்பரம் நடிச்சது மட்டும்தான் சாதனையா அன்பில்? - அண்ணாமலை ஆவேசம்!

அதிமுகவை மீட்போம்! ஆட்சியில் அமர்வோம்! மீதி முடிவுகள் மதுரை மாநாட்டில்..! - ஓபிஎஸ் அதிரடி அறிவிப்பு!

லாக்கப் மரணங்களை தடுக்க வக்கில்லை; இது மக்கள் விரோத ஆட்சி என்பதற்கு இதை விட வேறென்ன சாட்சி? ஈபிஎஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments