Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சென்னையில் இடியுடன் கூடிய மழை: சாலைகளில் மழைநீர்!

சென்னையில் இடியுடன் கூடிய மழை: சாலைகளில் மழைநீர்!
, வெள்ளி, 6 நவம்பர் 2020 (08:05 IST)
சென்னையின் பல இடங்களில் இன்று அதிகாலை இடியுடன் கூடிய மழை பெய்தது. இதனை அடுத்து சாலைகளில் மீண்டும் மழைநீர் தேங்கி உள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது 
 
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது என்பது தெரிந்தது. சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளிலும் கனமழை முதல் மிதமான மழை வரை பெய்து வருகிறது. இந்த மழை காரணமாக நீர் தேக்கங்களில் நீர் வரத்து அதிகரித்து உள்ளது
 
இந்த நிலையில் தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு சென்னை உள்பட ஒருசில மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதன்படி இன்று அதிகாலை முதல் சென்னையின் முக்கிய இடங்களில் மழை பெய்து வருவதாகவும் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்து வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. குறிப்பாக சென்னையில் வடபழனி, கோயம்பேடு, அண்ணாநகர் பகுதியில் நல்ல மழை பெய்துள்ளது 
 
மேலும் அடுத்த இரண்டு நாட்களில் 12 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தடையை மீறி வேல் யாத்திரை தொடரும்: வி.பி.துரைசாமி