Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காஞ்சிபுரத்தில் கனமழை.. விநாயகர் சதுர்த்தி கொண்டாடும் மக்களுக்கு சிக்கல்..!

Webdunia
திங்கள், 18 செப்டம்பர் 2023 (16:55 IST)
காஞ்சிபுரத்தில் தற்போது கனமழை பெய்து வருவதை அடுத்து விநாயகர் சதுர்த்தி கொண்டாடும் பொது மக்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. 
 
இன்று மதியத்திற்கு மேல் தான் விநாயகர் சதுர்த்தி தொடங்குவதால் மாலையில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட மக்கள் திட்டமிட்டிருந்தனர். இந்த நிலையில் திடீரென காஞ்சிபுரம் பகுதியில் தற்போது கன மழை பெய்து வருவதால் விநாயகர் சதுர்த்தி கொண்டாட முடியாமல் மக்கள் சிக்கலில் உள்ளதாக தெரிகிறது. மேலும் விநாயகர் கோவிலுக்கும் மழை காரணமாக செல்ல முடியாத நிலை உள்ளது. 
 
ஏற்கனவே சென்னை உள்பட ஏழு மாவட்டங்களில் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதால் இன்று மாலை முதல் இரவு வரை என் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது 
 
எனவே மக்கள் பாதுகாப்பாக வீட்டிலேயே விநாயகர் சதுர்த்தியை கொண்டாடி விநாயகரை வழிபடுங்கள் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை திரும்பினார் முதலமைச்சர் ஸ்டாலின்.! நேரில் வாழ்த்து பெற்ற செந்தில் பாலாஜி.!!

ஹாரி பாட்டர் படத்தில் நடித்த பிரபல நடிகை மேகி ஸ்மித் மரணம்.!

"சித்ரா மரண வழக்கில் திடீர் திருப்பம்" - தந்தை மேல்முறையீடு.! சிக்குவாரா ஹேம்நாத்.?

செந்தில் பாலாஜியின் பணிகள் மென்மேலும் சிறக்க வாழ்த்தி மகிழ்ந்தோம் - அமைச்சர் உதயநிதி ட்வீட்..!!

திருப்பதி கோவிலுக்கு செல்ல அனுமதி இல்லை..! “மாநிலத்தில் பேய் ஆட்சி” - கொந்தளிக்கும் ஜெகன்மோகன்.!!

அடுத்த கட்டுரையில்
Show comments