Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கடலூரில் திடீர் சூறைக்காற்று: இடியுடன் கூடிய மழை

Webdunia
புதன், 1 மே 2019 (19:52 IST)
ஃபனி புயல் பாதிப்பு சென்னை உள்பட தமிழகத்திற்கு இருக்காது என்று வானிலை அறிக்கை கூறிய நிலையில் சற்றுமுன் கடலூரில் பயங்கர சூறைக்காற்று வீசியது. மேலும் இடி, மின்னலுடன் கூடிய மழையும் ஐந்து முதல் பத்து நிமிடங்கள் பெய்ததாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. கடலூர் மட்டுமின்றி புதுச்சேரி வில்லியனூர், அரியங்குப்பம், காலாப்பேட் பகுதிகளி்லும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது
 
மேலும் கடலூரில் உள்ள பெரும்பாலான பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. சற்றுமுன் வீசிய சூறைக்காற்றால் இந்த மின்சார துண்டிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. 
 
இந்த நிலையில் ஃபனி புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை சென்ட்ரலில் இருந்து நாளை மற்றும் நாளை மறுநாள் இயக்கப்படவிருந்த 9 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. யஷ்வந்த்பூர் - முசாபர்பூர், சந்திரகாசி, ஹல்டியா, சாலிமர், ஹவுரா ஆகிய விரைவு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், * திருவனந்தபுரம் - சாலிமர், யஷ்வந்தபூர் - ஹவுரா செல்லும் 3 விரைவு ரயில்கள் மற்றும் நாளை மறுநாள் சென்ட்ரல் - ஹவுரா கோரமண்டல் ஆகிய விரைவு ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பூரில் நடந்தது ஆணவக் கொலை இல்லை! - போலீஸார் கொடுத்த புது விளக்கம்!

வக்பு மசோதா.. வாக்கெடுப்பில் அதிமுக எம்பிக்களின் நிலை என்ன?

ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த வங்கி மேலாளர் தற்கொலை: அன்புமணி கண்டனம்..!

கபாலீஸ்வரர் கோயில் பங்குனி பெருவிழா: மயிலாப்பூரில் நாளை முதல் போக்குவரத்து மாற்றம்

ஏப்ரல் 5 வரை வெளுத்து வாங்க போகும் கனமழை: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments