சென்னையில் இடி மின்னலுடன் விடிய, விடிய கனமழை.. காலை 8.30 மணி வரை மழை பெய்யும் என அறிவிப்பு..!

Webdunia
திங்கள், 14 ஆகஸ்ட் 2023 (07:33 IST)
சென்னையில் விடிய விடிய இடி மின்னலுடன் கூடிய மழை பெய்த நிலையில் இன்று காலை 8:30 மணி வரை சென்னை செங்கல்பட்டு திருவள்ளூர் காஞ்சிபுரம் மாவட்டங்களில் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
கடந்த சில நாட்களாக மீண்டும் வெப்பம் அதிகரித்து வந்த நிலையில் நேற்று திடீரென வானிலை மாறி மழை பெய்தது. சென்னை உள்பட பெரும்பாலான பகுதிகளில் நேற்று பெய்த கன மழை மகிழ்வித்துள்ளது. 
 
குறிப்பாக சென்னையில் இடி மின்னலுடன் விடிய விடிய கனமழை கொட்டி தீர்ந்தது. இதன் காரணமாக பல்வேறு பகுதிகளில் தாழ்வான இடங்களில் மழை நீர் தேங்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.  
 
சென்னை ஏசிஎஸ் மருத்துவ கல்லூரியில் 10.3 சென்டிமீட்டர் மழையும், காட்டுப்பாக்கத்தில் 7.7 சென்டிமீட்டர் மழையும், நந்தனத்தில் 6.6 சென்டிமீட்டர் மழையும், பெய்ததாக தகவல் வெளியாகி உள்ளன.  
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற சிஐஎஸ்எஃப் பாதுகாப்புடன் அனுமதி: உயர் நீதிமன்றம் உத்தரவு!

சென்னையில் நீர் தேக்கமில்லை; விஜய் வீட்டிலிருந்து பேசுகிறார்! டிகேஎஸ் இளங்கோவன்..!

தீபம் ஏற்ற உரிமை இல்லையா?... திமுக அரசை விளாசும் வானதி சீனிவாசன்...

13 பேரை கொன்ற குற்றவாளி.. 80,000 பேர் முன்னிலையில் மரண தண்டனை நிறைவேற்றம்! சுட்டுக்கொன்ற சிறுவன்..!

25 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை: சென்னையில் இன்று லேசான வெயில்..!

அடுத்த கட்டுரையில்
Show comments