Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையின் பல பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை!

Webdunia
வியாழன், 22 அக்டோபர் 2020 (16:28 IST)
கடந்த சில நாட்களாகவே சென்னை உள்பட தமிழகம் முழுவதும் வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஏற்பட்டதன் காரணமாக மழை பெய்து வருகிறது என்பது தெரிந்ததே குறிப்பாக சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக விட்டு விட்டு மிதமான மழை பெய்து வருகிறது 
 
இந்த நிலையில் வானிலை ஆய்வு மையம் கணித்தது போலவே இன்றும் பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னையின் பல பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்து வருவதோடு இடி மின்னலும் ஏற்பட்டுள்ளதால் பெரும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
சென்னையின் முக்கிய பகுதிகளான வளசரவாக்கம் தாம்பரம் மதுரவாயல் உள்ளிட்ட பகுதிகளில் கன மழை பெய்து வருவதாகவும் தேனாம்பேட்டை சைதாப்பேட்டை கிண்டி வடபழனி உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்து வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது 
 
வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னை உள்பட வட மாவட்டங்களில் நல்ல மழை பெய்யும் என ஏற்கனவே சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆன்லைனில் ஷாப்பிங் செய்தால் மனநலம் பாதிக்கும்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

தேர்தல் முறைகேடு: ஆதாரம் இருந்தால் வெளியிடுங்கள்: ராகுல் காந்திக்கு ராஜ்நாத் சிங் சவால்..!

வெளிமாநிலத்தவர் தமிழக வாக்காளர்களாக மாறினால் பாதிப்பு ஏற்படும்: துரைமுருகன்

ஒரு கையில் புற்றுநோய் பாதித்த குழந்தை..இன்னொரு கையில் உணவு.. ஃபுட் டெலிவரி செய்யும் பெண்..!

கூலிப்படையை வைத்து கணவரை கொலை செய்ய முயன்ற மனைவி.. உபியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments