Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் இடி மின்னலுடன் கனமழை.. இன்றும் சில மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

Siva
திங்கள், 3 ஜூன் 2024 (07:01 IST)
சென்னை பள்ளிக்கரணை, மேடவாக்கம், கோவிலம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் நேற்று இரவு இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சுமார் ஒரு மணி நேரம் மழை கொட்டி தீர்த்ததால், அப்பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாகவும், எனவே அந்த மகிழ்ச்சி சோகமாக மாறியதாகவும் கூறப்படுகிறது.

மேலும் சென்னை அருகே உள்ள தாம்பரம், சேலையூர், செம்பாக்கம், மாடம்பாக்கம், வேங்கைவாசல் உள்ளிட்ட இடங்களிலும் இடியுடன் கனமழை கொட்டித் தீர்த்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்று சில மாவட்டங்களில் மிதமான மழை முதல் கன மழை வர பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, ராமநாதபுரம், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர், மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் புதுச்சேரி, காரைக்கால் மாவட்டங்களில் இன்று மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கிவிட்டதை அடுத்து அங்கு கனமழை பெய்து வரும் நிலையில் அதன் தாக்கம் தமிழகத்திலும் இருப்பதால்தான் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாஸ்மாக் மதுபானம் குறித்து அமைச்சர் துரைமுருகன் கூறும் கருத்து உண்மைதான்.. அண்ணாமலை

அதிமுக பிரமுகர் கொலை.. ஆடு விற்பனை தொடர்பான முன்பகையா? 3 பேர் கைது

பீகாரை தொடர்ந்து ஜார்கண்டிலும் இடிந்து விழும் பாலங்கள்! மக்கள் அதிர்ச்சி!

பிளக்ஸ் போர்டு வைக்கும் போது மின்சாரம் தாக்கி 15 வயது சிறுவன் உயிரிழப்பு.. திருவாரூரில் அதிர்ச்சி..!

சென்னையில் 11 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம்.. அடிபம்பிற்கு பூட்டு போட்டதால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments