Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அகமதாபாத்தில் வெளுக்கும் மழை! இன்றைக்கு போட்டி ரத்தானால் என்ன நடக்கும்?

Prasanth Karthick
ஞாயிறு, 1 ஜூன் 2025 (19:49 IST)

இன்று ஐபிஎல் சீசனில் எலிமினேட்டர் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோத இருந்த நிலையில் மழையால் ஆட்டம் தடைப்பட்டுள்ளது.

 

ஐபிஎல் சீசன் முடிவை நெருங்கியுள்ள நிலையில் இன்று வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டியில் ஆர்சிபி அணியுடன் மோத உள்ளது. அதன்படி இன்று இறுதி சுற்றுக்கு செல்ல மும்பை இந்தியன்ஸ் அணியும் பஞ்சாப் கிங்ஸ் அணியும் பலப்பரீட்சை செய்ய உள்ளன. 

 

நேரப்படி மாலை 7.30 மணிக்கு போட்டிகள் தொடங்கியிருக்க வேண்டிய நிலையில் அகமதாபாத் மைதானத்தில் தூரல் மழை பெய்து வருவதால் ஆட்டம் இன்னும் தொடங்கப்படவில்லை. எனினும் எலிமினேட்டர் போட்டி என்பதால் மழை காரணமாக ஆட்டம் தாமதமானாலும் ஓவர்கள் குறைத்து விளையாட்டு தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

 

ஒருவேளை ஆட்டம் முழுவதுமாக நடக்காமல் போனால் புள்ளி பட்டியலில் முன்னணியில் உள்ள அணி இறுதிப் போட்டிக்கு தேர்வாகும். எனவே இன்றைய ஆட்டம் ரத்தானால் பஞ்சாப் அணி நேரடியாக இறுதி போட்டிக்கு செல்ல வாய்ப்புள்ளது. இதனால் மும்பை ரசிகர்கள் மழை நிற்க வேண்டும் என பிரார்தித்து வருகின்றனர்.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாக்கு வங்கிக்காக கைது செய்வதா? கொல்கத்தாவில் கைதான கல்லூரி மாணவிக்கு நெதர்லாந்து எம்பி ஆதரவு..!

இரவுக்குள் 5 மாவட்டங்களில் மழை வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம் அலெர்ட்!

ஆட்டோ டிரைவரை செருப்பால் அடித்த இளம்பெண்.. பெங்களூரில் அதிர்ச்சி சம்பவம்..!

எடப்பாடியை எக்குத்தப்பாய் பேசிய ஆதவ் அர்ஜூனா! - தன் பேச்சு குறித்து வருத்தம்!

தலித்துக்கள் திருமண மண்டபத்தில் திருமணம் செய்வதா? தாக்குதல் நடத்திய மர்ம நபர்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments