Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இன்றிரவு 7 மணிக்குள் 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை அறிவிப்பு..!

இன்றிரவு 7 மணிக்குள் 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை அறிவிப்பு..!
, திங்கள், 5 ஜூன் 2023 (16:29 IST)
இன்று இரவு 7 மணிக்குள் தமிழகத்தில் உள்ள 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
கடந்த சில நாட்கள் ஆக வெயில் கொளுத்திக் கொண்டிருக்கும் நிலையில் இடையிடையே சில பகுதிகளில் மட்டும் மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். 
 
குறிப்பாக சென்னையில் இன்று திடீரென வானிலை மாறி பல பகுதிகளில் மழை பெய்தது. இந்த நிலையில் இன்று இரவு 7 மணிக்குள் தமிழகத்தில் உள்ள 20 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
தமிழகத்தில் உள்ள சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, நீலகிரி, ஈரோடு, கோயமுத்தூர், திருப்பூர், திண்டுக்கல், சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று இரவு 7 மணிக்குள் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நாசா, மைக்ரோசாஃப்டில் தமிழர்கள் பணிபுரிய மிகப்பெரும் காரணம் கருணாநிதி: வைரமுத்து