Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இன்று 12 மாவட்டங்களில் கனமழை: இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

Advertiesment
Rain
, திங்கள், 23 அக்டோபர் 2023 (10:26 IST)
தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, மயிலாடுதுறை, தேனி, தென்காசி ஆகிய 12 மாவட்டங்களில் இன்னும் 3 மணி நேரத்தில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
 
கனமழை காரணமாக ஒருசில இயற்கை பேரழிவுகள் ஏற்படும் அபாயம் உள்ளது என்றும், எனவே, மக்கள் பாதுகாப்பாக இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது
 
குறிப்பாக தேவையற்ற பயணங்களை தவிர்க்கவும், உயரமான இடங்களில் வசிப்பவர்கள் கவனமாக இருக்கவும், வெள்ளம், மண்சரிவு ஏற்படும் பகுதிகளில் இருந்து தள்ளி இருக்கவும், தேவையான பொருட்களை தயார்நிலையில் வைத்திருக்கவும், மழை காரணமாக ஏற்படும் பாதிப்புகளை தடுக்க அரசு மற்றும் பொதுமக்கள் இணைந்து செயல்பட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வங்கக்கடலில் அடுத்த 18 மணி நேரத்தில் புயல்..இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்