18 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழை: வானிலை ஆய்வு மையம்

Webdunia
புதன், 21 ஜூன் 2023 (08:00 IST)
கடந்த சில நாட்களாக மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். 
 
அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 18 மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், தி.மலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் வேலூர், ராணிப்பேட்டை, அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர் ஆகிய 18 மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை மழை பெய்யும் என்று இந்த மாவட்டங்களில் உள்ள பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக் கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்
 
மேலும் இன்னும் இரண்டு நாட்களுக்கு தமிழக முழுவதும் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த சில வாரங்களாக கோடை வெயில் கொளுத்தி வந்த நிலையில் தற்போது வானிலை மாறி குளிர்ந்த தகவல் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஓராண்டுக்கு இலவச Subscription.. பயனர்களை அதிகரிக்க ChatGPT எடுத்த அதிரடி முடிவு..!

நேற்று ஏற்றத்தில் இருந்த பங்குச்சந்தை இன்று திடீர் சரிவு.. முதலீட்டாளர்கள் அதிர்ச்சி..!

இன்று ஒரே நாளில் ரூ.1200 குறைந்தது தங்கம் விலை.. இன்னும் சரியும் என தகவல்..!

விக்கிப்பீடியாவுக்கு பதில் இன்னொரு தளம்.. எலான் மஸ்க்கின் ஏஐ தொழில்நுட்ப 'க்ரோக்கிப்பீடியா' அறிமுகம்!

இன்று செயற்கை மழை பெய்ய வைக்க திட்டம்.. வானிலை சாதகமாக இருக்குமா?

அடுத்த கட்டுரையில்
Show comments