Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளை 14 மாவட்டங்களில் கனமழை கொட்டித்தீர்க்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல்!

Webdunia
திங்கள், 10 அக்டோபர் 2022 (18:22 IST)
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக மிதமான மழை முதல் கனமழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் சற்று முன் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலின்படி நாளை 14 மாவட்டங்களில் கன மழை கொட்டி தீர்க்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது 
 
நீலகிரி, கிருஷ்ணகிரி, கோயம்புத்தூர்‌, திருச்‌சிராப்பள்ளி, தேனி, திருப்பூர்‌, திண்டுக்கல்‌, மதுரை, கரூர்‌, நாமக்கல்‌, சேலம்‌, தர்மபுரி மற்றும்‌ திருப்பத்தூர்‌, கிருஷ்ணகிரி, ஈரோடு ஆகிய 14 மாவட்டங்களில் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்யும் என்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக்கொள்ள வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
 
அக்டோபர் 12, 13, 14 ஆகிய நாட்களிலும் தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை ருத்தவரை 24 மணி நேரத்துக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பள்ளிகளில் முகக்கவசம் அணிவதற்கு உத்தரவிடப்படுமா? அமைச்சர் அன்பில் மகேஷ்

நோய்க்கிருமிகளை அமெரிக்காவுக்கு கடத்திய சீன விஞ்ஞானிகள் கைது.. மிகப்பெரிய விபரீதம் தடுப்பு..!

ராணுவ வீரர்களின் தனிப்பட்ட தகவல்களை வெளியிட கூடாது: ஊடகங்களுக்கு மத்திய அரசு கட்டுப்பாடு..!

என் பிள்ளைகள் மோடியின் ரசிகர்கள்.. அமெரிக்காவின் 2வது லேடி உஷா வான்ஸ் பேட்டி..!

நேற்றைய சரிவுக்கு பின் இன்று மீண்டும் உயர்ந்த பங்குச்சந்தை.. சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments