Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆந்திர கடலோர பகுதியில் வளிமண்டல சுழற்சி: சென்னையில் கனமழை தொடரும்..!

Siva
புதன், 30 அக்டோபர் 2024 (16:42 IST)
ஆந்திரா கடலோர பகுதியில் வளிமண்டல சுழற்சி ஏற்பட்டுள்ளதை அடுத்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று இரவு கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதையும, இந்த மழை நாளையும் தொடரும் என்பதையும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
மன்னார் வளைகுடா பகுதியில் வளிமண்டல சுழற்சி நிலவுவதாகவும், அதேபோல தெற்கு ஆந்திரா கடலோர பகுதியில் இன்னொரு வளிமண்டல சுழற்சி நிலவுவதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
இதன் காரணமாக தமிழகத்தின் சில பகுதிகள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழை இன்றும் நாளையும் பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று இரவு  சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்றும், நாளையும் மழை பெய்ய அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இன்று தீபாவளி விற்பனை மற்றும் நாளை தீபாவளி கொண்டாட்டம் இருக்கும் நிலையில், இன்றும் நாளையும் மழை பெய்யும் என்ற வானிலை அறிவிப்பு பொதுமக்களை அதிருப்தியடையச் செய்துள்ளது."
 
 
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டிஸ்சார்ஜ் ஆனார் முதல்வர் மு.க.ஸ்டாலின்! ஆனாலும் டாக்டர்கள் சொன்ன அறிவுரை!

12 ஆயிரம் ஐடி ஊழியர்கள் பணிநீக்கம்! TCS எடுத்த அதிரடி முடிவு! - அதிர்ச்சியில் ஐடி ஊழியர்கள்!

ஆயுள் தண்டனை அல்லது 7 ஆண்டு சிறை தண்டனை.. தேர்வு செய்ய குற்றவாளிக்கு வாய்ப்பு அளித்த நீதிபதி..!

பில்கேட்ஸுக்கு பரிசாக கொடுத்த தூத்துக்குடி முத்து.. பிரதமர் மோடி அளித்த தகவல்..!

துபாய் பியூட்டி பார்லரில் இளம்பெண்ணுக்கு வேலை.. விமான நிலையத்தில் இறங்கியதும் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments