Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய் எழுப்பிய பாசிசம், பாயாசம் கேள்வி சரியானதே: ஜெயகுமார்

Siva
புதன், 30 அக்டோபர் 2024 (16:37 IST)
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தனது கட்சியின் மாநாட்டில், "அவர்கள் பாசிசம் என்றால் நீங்கள் பாயாசமா" என திமுகவை நோக்கி எழுப்பிய கேள்வி சரியானது தான் என முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் இன்று அளித்த பேட்டியில் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 117-வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு சென்னை நந்தனத்தில் உள்ள அவரது சிலைக்கு அதிமுக சார்பில் மாலை அணிவிக்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய போது, "அவர்கள் பாசிசம் என்றால் நீங்கள் பாயாசமா? என விஜய் அனுப்பிய கேள்வி சரியான ஒன்றுதான்; மத்திய அரசின் நடவடிக்கையைப் போலவே திமுக அரசின் நடவடிக்கையும் இருக்கிறது," என்று தெரிவித்தார்.

 புரட்சித் தலைவர் எம்ஜிஆர் ஆட்சியில் தான் முத்துராமலிங்கத் தேவரின் பிறந்த நாள் ஜெயந்தி விழாவாக அறிவிக்கப்பட்டது என்றும், புரட்சித்தலைவி ஜெயலலிதா ஆட்சியில் தான் தேவருக்கு தங்கக் கவசம் அணிவிக்கப்பட்டது என்றும் கூறினார்.

மேலும், "எம்ஜிஆர் ஒரு ஒப்பற்ற தலைவராக இருப்பதால்தான் புதிதாக கட்சி தொடங்குபவர்கள் அவரது பெயரை உச்சரிக்கிறார்கள்," என்றும் எம்ஜிஆர் பெயரை விஜய் உச்சரித்தது குறித்து கூறியுள்ளார்.


Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாறி மாறி வாழ்த்து தெரிவித்த ஸ்டாலின் - ஈபிஎஸ்.. யார் பக்கம் போவார் டாக்டர் ராமதாஸ்?

12வது மாடியில் இருந்து விழுந்த 4 வயது குழந்தை பரிதாப மரணம்.. தாயின் கவனக்குறைவால் சோகம்..!

இன்றிரவு கொட்டப்போகுது கனமழை.. 20 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

ஹைட்ரஜனில் இயங்கும் முதல் ரயில்.. சென்னை ஐசிஎப் சோதனை வெற்றி..!

திருமணம் செய்ய மறுத்ததால் ஆத்திரம்.. காதலர் வீட்டின் முன் தீக்குளித்த பெண் காவலர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments