நாளை வெளுக்கப்போகும் கனமழை! ரெட் அலெர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம்!

Prasanth K
திங்கள், 4 ஆகஸ்ட் 2025 (15:21 IST)

நாளை முதல் கனமழைக்கான வாய்ப்புள்ளதாக ஏற்கனவே கூறப்பட்டிருந்த நிலையில் வானிலை ஆய்வு மையம் ரெட் அலெர்ட் விடுத்துள்ளது.

 

கடந்த சில காலமாக மிதமான மழை தமிழகத்தின் பல பகுதிகளில் பெய்து வரும் நிலையில், ஆகஸ்டு மாத தொடக்கம் முதல் மழைப்பொழிவு அதிகரிக்கும் என கூறப்பட்டது. அவ்வாறாக நாளை பல இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

 

அதன்படி, கோவை, நீலகிரி மாவட்டங்களில் அதிகனமழைக்கான ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. தேனி, தென்காசி மாவட்டங்களுக்கு மிக கனமழை முதல் கனமழை வரை பெய்யும் வாய்ப்புள்ளதாக ஆரஞ்சு அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

திண்டுக்கல், திருப்பூர், ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு மிதமானது முதல் கனமழை வரை பெய்யும் என மஞ்சள் அலெர்ட் அளிக்கப்பட்டுள்ளது. வரும் வாரங்களில் தமிழக மாவட்டங்களில் மழைப்பொழிவு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 18 மாவட்டங்களில் மழை பெய்யும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்..!

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு!

முயல்வேட்டையில் ஈடுபட்ட 2 சிறுவர்கள் பரிதாப பலி.. திருவண்ணாமலையில் சோகம்..!

சபரிமலைக்கு மாலை போட்ட மாணவர் கருப்பு உடை அணிய தடை.. பள்ளி நிர்வாகத்திற்கு எதிர்ப்பு..!

வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடந்தால் நேபாளம் போல் புரட்சி வெடிக்கும்: ஆர்ஜேடி எச்சரிக்கை

அடுத்த கட்டுரையில்
Show comments