Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்றும், நாளையும் வெளுக்கப்போகும் கனமழை! எந்தெந்த மாவட்டங்களில்?

Prasanth Karthick
செவ்வாய், 11 மார்ச் 2025 (14:38 IST)

தமிழகத்தின் பல பகுதிகளில் இன்று காலை முதலே கனமழை பெய்து வரும் நிலையில் நாளையும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதன் காரணமாக தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதன்படி நெல்லை, கன்னியாக்குமரி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய 4 மாவட்டங்களில் இன்று கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. 

 

விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டிணம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

 

நாளை கன்னியாக்குமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் கனமழை பெய்யும், சென்னையில் இன்றும், நாளையும் இடியுடன் கூடிய மழை பெய்யும். தமிழ்நாட்டில் இன்று முதல் 17ம் தேதி வரை பல பகுதிகளில் லேசானது முதல் மிதமானது வரையிலான மழைப்பொழிவு இருக்கும் என கூறப்பட்டுள்ளது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிரதமர் மோடி இங்கிலாந்து, மாலத்தீவு பயணம்: வர்த்தகம், உறவுகள் மேம்பாட்டில் புதிய அத்தியாயம்!

ஆரம்பாக்கம் சிறுமி பாலியல் வன்கொடுமை.. ஒரு வாரம் ஆகியும் சிக்காத குற்றவாளி..!

தங்கம் விலை வரலாறு காணாத உச்சம்.. வெள்ளி விலையும் உயர்வு..!

அமலாக்கத்துறை முக்கிய அதிகாரி திடீர் ராஜினாமா.. இரு முதல்வர்களை கைது செய்தவர்..!

முதல்வர் ஸ்டாலின் சகோதரர் மு.க.முத்து காலமானார்! அரசியல் பிரபலங்கள் இரங்கல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments