ஒரே நேரத்தில் இரண்டு புதிய காற்றழுத்த தாழ்வு.. தமிழகத்தில் கனமழை பெய்யுமா?

Mahendran
வெள்ளி, 18 அக்டோபர் 2024 (13:15 IST)
ஒரே நேரத்தில் இரண்டு காற்றழுத்த தாழ்வு பகுதிகள் தோன்ற இருப்பதை அடுத்து, தமிழகத்திற்கு கனமழை ஏற்படுமா என்ற அச்சம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. 
வங்கக் கடல் மற்றும் அரபிக்கடல் ஆகிய இரண்டு கடல்களில் ஒரே நேரத்தில் இரண்டு புதிய காற்றழுத்த தாழ்வுகள் உருவாகின்றன என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
வங்கக் கடலில் அக்டோபர் 22ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்று கூறப்பட்ட நிலையில், இந்த காற்றழுத்த தாழ்வு வடக்கு அந்தமான் பகுதியில் உருவாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
இந்த நிலையில், அரபிக்கடலில் இன்னும் 12 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாகவும், இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இந்திய பகுதியை விட்டு விலகிச் செல்லும் என்று கணிக்கப்பட்டுள்ளது. 
 
வங்கக் கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி வடமேற்கு திசையை நோக்கி நகரும் என்றும், இதனால் தமிழகத்திற்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதா என்பது இனிமேல் தான் தெரியவரும் என்றும் கூறப்படுகிறது. 
 
ஆனால், அரபிக்கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழக உள்பட தென்னிந்தியாவுக்கு எந்த பாதிப்பும் இருக்காது என்று கூறப்படுகிறது. இருப்பினும், வடகிழக்கு பருவமழை காரணமாக சென்னை உள்பட பல மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுக எடுத்த சர்வே!.. விஜயின் வாக்கு வாங்கி!.. அதிர்ச்சியில் ஸ்டாலின்!....

விஜய் எங்கு போட்டியிடுவார்?.. லிஸ்ட்டில் 3 தொகுதிகள்!.. அரசியல் பரபர!...

SIR எதிரொலி!.. தமிழகத்தில் 70 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்?..

சபரிமலையில் தரிசன நேரம் மாற்றியமைப்பு.. தேவசம் முடிவுக்கு என்ன காரணம்?

10 தோல்வி பழனிசாமிக்கு 11வது முறையும் தோல்வி தான்: ஆர்.எஸ்.பாரதி

அடுத்த கட்டுரையில்
Show comments