Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உட்கார்ந்து பதில் சொன்னதால் வழக்கு: 10 ஆண்டுகளுக்குப் பிறகு விடுதலை..!

Siva
வெள்ளி, 18 அக்டோபர் 2024 (13:01 IST)
தகவல் ஆணைய வழக்கு விசாரணையில் உட்கார்ந்து பதில் அளித்த அதிகாரி மீது வழக்கு தொடரப்பட்ட நிலையில் 10 ஆண்டுகளுக்கு பின்னர் அவர் தற்போது விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 2012 ஆம் ஆண்டு அதிமுக அரசின் நாளிதழ் விளம்பர செலவு குறித்த   கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு அரசு பதில் அளிக்காததால் 2015 ஆம் ஆண்டு மாநில தகவல் ஆணையத்தில் முறையீடு செய்யப்பட்டது.

இந்த விசாரணையின் போது மனுதாரர் சிவ இளங்கோ உட்கார்ந்து கொண்டு பதில் அளித்தார். நின்று கொண்டு பதில் அளிக்க வேண்டும் என தலைமை தகவல் ஆணையர் ஸ்ரீபதி கூறியதை ஏற்காததால், தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு மூன்று நாட்கள் சிவ இளங்கோ சிறையில் அடைக்கப்பட்டார்.

இதன் விசாரணை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சுமார் பத்து ஆண்டுகள் நடந்தது என்பதும் 140 முறை வாய்தா வாங்கிய நிலையில் சிவ இளங்கோவை வழக்கிலிருந்து விடுதலை செய்து நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். எனினும் ஆர்டிஐ கேள்விக்கு இன்னும் பதில் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.



Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகள்களை மீட்டுத் தரக்கோரி தந்தையின் ஆட்கொணர்வு மனு.. ஈஷா தரப்பு வாதம்..!

அக்டோபர் 22ல் வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: சென்னைக்கு பாதிப்பா?

மனித உரிமை ஆணையத்தின் செயல்பாடுகளில் தலையிடும் திமுக அரசு: ஈபிஎஸ் குற்றச்சாட்டு..!

ஹமாஸின் உச்ச தலைவர் யாஹ்யா சின்வாரை கொன்ற இஸ்ரேல்! - உறுதிப்படுத்திய நேதன்யாகு!

பாகிஸ்தான் ஆதரவு கோஷம்! ‘பாரத் மாதா கி ஜெய்’ சொல்லணும்! - நீதிமன்றம் கொடுத்த நூதன தண்டனை!

அடுத்த கட்டுரையில்
Show comments