Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கனமழை எதிரொலி: 8 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை..!

Webdunia
வியாழன், 23 நவம்பர் 2023 (07:42 IST)
சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக மிதமான மழை முதல் கனமழை வரை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். அது மட்டுமின்றி இன்னும் இரண்டு நாட்களுக்கு தமிழகம் முழுவதும் கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கனமழை காரணமாக  தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என்றும் ஒரு மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, புதுக்கோட்டை, விருதுநகர், மற்றும் நீலகிரி மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என்றும் தேனி மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல்  கோவையில் தொடர் மழை காரணமாக மேட்டுப்பாளையம் தாலுகாவில் உள்ள 193 பள்ளிகளுக்கு இன்று விடுமுறை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  அதே போல் கோவை காரமடை ஒன்றியத்தில் உள்ள பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கச்சத்தீவை மீட்கும் வரை 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுக்க வேண்டும்: விஜய் ஐடியா

முட்டை வழங்கவில்லை என புகார்.. மாணவரை துடைப்பத்தால் அடித்த சத்துணவு ஊழியர் சஸ்பெண்ட்..!

ரிசர்வ் வங்கி ஆளுனர் கையெழுத்துடன் புதிய 500 ரூபாய் நோட்டு.. RBI அறிவிப்பு..!

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மீண்டும் உயர்வு.. டிரம்ப் வரி விதிப்பு காரணமா?

ஆதார் கார்டே ரெடி பண்ணும் சாட் ஜிபிடி? ஆதார் தகவல்கள் எப்படி AI க்கு தெரிந்தது? - அதிர்ச்சி சம்பவம்!

அடுத்த கட்டுரையில்
Show comments