Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அடுத்த 3 மணி நேரத்தில் 4 மாவட்டங்களில் கொட்ட போகுது கனமழை: வானிலை எச்சரிக்கை..!

அடுத்த 3 மணி நேரத்தில் 4 மாவட்டங்களில் கொட்ட போகுது கனமழை: வானிலை எச்சரிக்கை..!
, திங்கள், 11 டிசம்பர் 2023 (11:06 IST)
சமீபத்தில் ஏற்பட்ட புயலின் பாதிப்பிலிருந்து இன்னும்  மக்கள் மீண்டு வராத நிலையில் இன்று அடுத்த மூன்று மணி நேரத்தில் நான்கு மாவட்டங்களில் மிதமான மழை முதல் கன மழை வரை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  
 
திருநெல்வேலி, இராமநாதபுரம், கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி ஆகிய நான்கு மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு மிதமான மழை முதல் கனமழை வரை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது 
 
 வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் தொடங்கியதிலிருந்து சென்னை உட்பட தமிழகத்தின் பல பகுதிகளில் மழை வெளுத்து வாங்கி வரும் நிலையில் தற்போது அரபி கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்து தாழ்வு காரணமாக தென் மாவட்டங்கள் உள்ளிட்ட சில பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
 
 இதனை அடுத்து மேற்கண்ட நான்கு மாவட்டங்களில் மழை பெய்யும் வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால் அந்தந்த மாவட்ட நிர்வாகிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக்கொள்ள அறிவுறுத்தப்படுகின்றனர்
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இன்று வாரத்தின் முதல் நாளில் பங்குச்சந்தை நிலவரம் எப்படி? சென்செக்ஸ், நிப்டி எவ்வளவு?