இன்னும் சில மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை: வானிலை எச்சரிக்கை..!

Webdunia
வியாழன், 16 நவம்பர் 2023 (12:52 IST)
தமிழ்நாட்டில் உள்ள ஆறு மாவட்டங்களில் இன்னும் சில மணி நேரத்தில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 
 
வங்க கடலில் தோன்றிய காற்றழுத்து தாழ்வு மண்டலம் காரணமாக சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை முதல் கனமழை பெய்து வருகிறது. மேலும் புதுச்சேரி காரைக்கால் ஆகிய பகுதிகளிலும் நல்ல மழை பெய்து வருகிறது. 
 
இந்த நிலையில் இன்று காலை நான்கு மாவட்டங்களில் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்த நிலையில் தற்போது ஆறு மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்று அறிவித்துள்ளது. 
 
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களிலும் காரைக்காலில் உள்ள சில பகுதிகளிலும் அடுத்த மூன்று மணி நேரத்தில் இடிமின்னலுடன் கூடிய மிதமான மழை முதல் கனமழை பெய்ய வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
எனவே இன்று வீட்டை விட்டு வெளியே செல்பவர்கள் தகுந்த முன்னேற்பாடுகளை செய்து  கொண்டு செல்லவும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஃபுல்லா முள்வேலி!.. ஒருத்தனும் ஏற முடியாது!.. ஈரோடு தவெக பொதுக்கூட்ட அப்டேட்!...

சர்வேலாம் சும்மா!.. தளபதியை ஏமாத்துறாங்க!.. புலம்பும் தவெக நிர்வாகிகள்!....

பாதை மாறி சென்ற ரேபிடோ பைக் ஓட்டுனர்.. பைக்கில் இருந்து குதித்து தப்பிய இளம்பெண்..!

சாமிய ஊர்வலம் கொண்டு போய் கோவிலுக்குள்ள வைக்கணும்!.. விஜயை கொண்டாடும் ஈரோடு தவெக நிர்வாகிகள்..

டெல்லியில் மெஸ்ஸி.. விராத் கோஹ்லியுடன் கால்பந்து விளையாடுகிறாரா? மோடி, அமித்ஷாவுடன் சந்திப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments