Webdunia - Bharat's app for daily news and videos

Install App

9 மாவட்டங்களில் மிக கனமழைக்கான எச்சரிக்கை.. வானிலை ஆய்வு மையம்..!

Mahendran
சனி, 19 அக்டோபர் 2024 (15:04 IST)
தமிழகத்தில் உள்ள 9 மாவட்டங்களில் மிக கனமழைக்கான எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் எடுத்துள்ளதை அடுத்து, பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.
 
கடந்த சில நாட்களுக்கு முன், தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதாக அறிவிக்கப்பட்ட நிலையில், சென்னை உள்பட தமிழகம் முழுவதும் பரவலாக மிதமான மழை முதல் கனமழை வரை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். இன்று அதிகாலை, சென்னையின் பல பகுதிகளில் கனமழை பெய்ததை அடுத்து, சாலைகளில் மழை நீர் தேங்கி உள்ளது.
 
இந்த நிலையில், தமிழகத்தில் உள்ள 9 மாவட்டங்களில், அதாவது திருப்பத்தூர், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு ஆகிய பகுதிகளில் மிக கனமழைக்கான எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
 இதனை அடுத்து, பொதுமக்கள் அவசியம் இருந்தால் மட்டும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டும் என்றும், இல்லை என்றால் பாதுகாப்பாக வீட்டிற்குள் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல்வர் வேட்பாளர் ஆகிறாரா சசிதரூர்.. கருத்துக்கணிப்பு என்ன சொல்கிறது?

5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம்!

529 பேர் ஜூலை 15 முதல் வீட்டுக்கு போங்க.. இண்டெல் நிறுவனத்தின் அதிர்ச்சி அறிவிப்பு..!

மனைவியின் கழுத்தை அறுத்த கணவர்: கள்ளக்காதலனின் பிறப்புறுப்பு சிதைப்பு - ஒடிசாவில் பயங்கரம்!

மொத்தமாக கூகிள் ப்ரவுசர்க்கு முடிவுரை? AI Browserஐ அறிமுகப்படுத்தும் Open AI! - சூதானமாக கூகிள் செய்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments