Webdunia - Bharat's app for daily news and videos

Install App

3 நாட்கள் புரட்டி எடுக்கும் கனமழை: 25 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்..!

Siva
ஞாயிறு, 13 அக்டோபர் 2024 (07:10 IST)
வங்கக்கடல் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ச்சியாக உருவாகும் வளிமண்டல சுழற்சிகளின் காரணமாக, தமிழகத்தின் 25 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள வானிலை மையம் அறிவித்ததன்படி, இதற்கான மழை வரும் மூன்று நாட்களுக்கு மிகுந்த தாக்கம் செலுத்தும் என்று கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பு:

மத்திய கிழக்கு அரபிக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை, அங்கு தொடர்ந்து வருகிறது.

இந்த நிலை, இன்று வடமேற்கு திசைக்கு நகர்ந்து மத்திய அரபிக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த மண்டலமாக வலுவடைய வாய்ப்புள்ளது. இந்த சூழலில், தென் தமிழக மற்றும் தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் தனித்தனி வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள் காணப்படுகின்றன. அரபிக்கடலில் நிகழும் காற்றழுத்தம் மேற்கே நகர வாய்ப்பு உள்ளது.

மேலும், இந்திய பெருங்கடலின் பூமத்திய ரேகை பகுதி மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளிலும் வளிமண்டல சுழற்சிகள் காணப்படுகின்றன. இதன் விளைவாக, நாளை இங்கு குறைந்த காற்றழுத்த மண்டலம் உருவாகும் சூழல் உருவாகியுள்ளது.

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் தென்மேற்கு பருவக்காற்று குறைந்து வரும் நிலையில், வங்கக்கடலில் உருவாகும் காற்றழுத்த மண்டலத்தால் வடகிழக்கு பருவமழை தொடங்க அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. இதனை அடுத்து, தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் மற்றும் புதுச்சேரியில் இடி, மின்னலுடன் மிதமான மழை நிகழ வாய்ப்பு உள்ளது. இது 15ம் தேதி வரை நீடிக்கும்.



Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சி ஒழியும் வரை நமக்கு நாம் தான் பாதுகாப்பு! ஈபிஎஸ் காட்டம்..!

விஜய்க்கு நல்ல மனசு.. உதவி செய்யும் எண்ணம் இருக்கிறது: திருநாவுக்கரசர்

அதே 11A இருக்கையில் அமர்ந்ததால் நானும் உயிர் பிழைத்தேன்: பிரபல நடிகர்

மதுரை முருக பக்தர் மாநாட்டிற்கு உயர்நீதிமன்றம் பச்சைக்கொடி: ஆனால் சில நிபந்தனைகள்..!

தீவிரமடையும் தென்மேற்கு பருவமழை: தமிழகத்தின் 7 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..

அடுத்த கட்டுரையில்
Show comments