முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் சுட்டுக்கொலை.. பெரும் பரபரப்பு..!

Siva
ஞாயிறு, 13 அக்டோபர் 2024 (07:03 IST)
மஹாராஷ்டிராவின் முன்னாள் அமைச்சர் மற்றும் தேசியவாத காங்கிரஸ் தலைவரான பாபா சித்திக் நேற்று  இரவு மர்ம நபர்களால் துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியூட்டியுள்ளது.
 
பாபா சித்திக், அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரசின் முக்கிய உறுப்பினராக இருந்தார். மும்பையில் உள்ள நிர்மல் நகர் பகுதியில், தனது அலுவலகத்தில் இருந்து வெளியே வந்து காரில் அமரும்போது, இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்தது.
 
இந்த சம்பவத்தின் போது, மர்ம கும்பல் திடீரென பட்டாசுகளை வெடிக்கச் செய்து பாபா சித்திக்கின் மீது தொடர்ந்து துப்பாக்கிச்சூடு நடத்தியது. பல குண்டுகள் அவரது வயிறு மற்றும் மார்பில் பாய்ந்தன, இதனால் அவர் மயங்கி சரிந்தார்.
 
அப்பகுதியினர் அவரை உடனே மீட்டு, லீலாவதி மருத்துவமனைக்கு கொண்டு சென்றாலும், அங்கு சிகிச்சை பலனின்றி சித்திக் உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளதுடன், மூவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தலை தீபாவளிக்கு மாமனார் வீட்டிற்கு வந்த புது மணப்பெண் தற்கொலை.. என்ன காரணம்?

துபாயில் படித்த 18 வயது இந்திய மாணவர் திடீர் மரணம்.. இந்த சின்ன வயதில் மாரடைப்பா?

வழக்கு பதியாமல் கட்டப் பஞ்சாயத்து செய்வ்தா? காவல்துறைக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை கண்டனம்..!

மாமனார் நாராயணமூர்த்தி சொன்னபடி வாரம் 70 மணி நேரம் வேலை செய்யும் ரிஷி சுனக்.. நெட்டிசன்கள் கிண்டல்..!

இந்திய பெண்ணை வேலையில் இருந்து தூக்கிய மெட்டா.. சில நிமிடங்களில் கிடைத்த அடுத்த வேலை..!

அடுத்த கட்டுரையில்
Show comments