தீபாவளி தினத்தில் பட்டாசு வெடிக்க முடியாதா? 23 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..!

Siva
திங்கள், 20 அக்டோபர் 2025 (10:50 IST)
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, தமிழகத்தில் இன்று பெரும்பாலான இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. 
 
இன்று பகல் 1 மணி வரை செங்கல்பட்டு, சென்னை, கடலூர், காஞ்சிபுரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், ராணிப்பேட்டை, திருவாரூர், தஞ்சாவூர், திருவள்ளூர், தூத்துக்குடி, திருநெல்வேலி, விழுப்புரம் ஆகிய மாவட்டங்கள், அத்துடன் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மிதமான மழை பெய்யும்.
 
அரியலூர், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தென்காசி, திருச்சி, திருவண்ணாமலை, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் 
லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.
 
இதன் மூலம், சென்னை உட்பட மொத்தம் 24 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை நீடிக்க வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் வரும் அக்டோபர் 21-ஆம் தேதி வாக்கில் ஒரு காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என்றும், இது மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து மேலும் வலுப்பெற வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்னொரு புதிய காற்றழுத்த தாழ்வு.. இது டிரைலர் தான்.. பயமுறுத்தும் தமிழ்நாடு வெதர்மேன்..!

வங்கக் கடல் புயல் சின்னம் 'ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக' மாறியது: கரையை கடக்கும் நகர்வு!

காணாமல் போன 800 செல்போன்களை கண்டுபிடித்த போலீஸ்.. தொலைத்தவர்களுக்கு தீபாவளி பரிசு..!

முன்னாள் கூகுள் சி.இ.ஓ மீது கள்ளக்காதலி பகீர் குற்றச்சாட்டு.. $100 மில்லியன் விவகாரமா?

ஏஐ ஆதிக்கம் அதிகரிப்பதால் விக்கிபீடியா தேடுதல் குறைந்ததா? அதிர்ச்சி தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments