Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் ஒமிக்ரான் பாதிப்பு - அமைச்சர் கூறுவது என்ன?

Webdunia
வியாழன், 16 டிசம்பர் 2021 (11:43 IST)
இந்தியாவை பொறுத்தவரை ஒமைக்ரான் மூலம் 3வது அலைக்கான வாய்ப்பு அதிகம் இருப்பதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல். 

 
தென் ஆப்பிரிக்காவில் தோன்றிய ஒமிக்ரான் வைரஸ் தற்போது 77 நாடுகளுக்கு பரவி உள்ளது. குறிப்பாக இந்தியாவில் கர்நாடகா, மகாராஷ்டிரா, ராஜஸ்தான், குஜராத், டெல்லி, ஆந்திரா, கேரளா, சண்டிகார், மேற்கு வங்காளம், தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் தொற்று பரவி 72 பேருக்கு ஒமைக்ரான் உறுதியானது.
 
இந்நிலையில். தமிழகத்தில் ஒருவருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதியாகியுள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். அவருடன் தொடர்பில் இருந்தவர்களைக் கணகாணிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இது குறித்து அவர் கூறியதாவது, ஒமிக்ரான் உறுதி செய்யப்பட்ட நபர் ஏற்கனவே 2 கட்ட தடுப்பூசியும் போட்டுள்ளார். 
 
ஒமிக்ரான் பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்துவது அவசியமானது. ஒமிக்ரான் பரவலை கட்டுப்படுத்த கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. ஆக்சிஜன், வெண்டிலேட்டர், மருந்து மாத்திரைகள் உள்ளிட்ட உயிர் காக்கும் வசதிகள் அனைத்தும் எல்லா மருத்துவமனைகளிலும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. 
 
டெல்டா வைரசை விட ஒமிக்ரான் வைரஸ் வேகமாக பரவுகிறது. ஆனால் பாதிப்பு எந்த அளவு இருக்கும் என்பதை இதுவரை உறுதியாக கணிக்க முடியவில்லை. இந்தியாவை பொறுத்தவரை ஒமைக்ரான் வைரஸ் மூலம் 3வது அலைக்கான வாய்ப்பு அதிகம் இருப்பதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளார்கள். எனவே மக்கள் கவனத்துடன் இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2500 பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி நியமனம்.. உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு..!

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி.. இன்று வெளுத்து கட்டப்போகும் மழை.. சென்னைக்கு எச்சரிக்கை..!

திமுக கொடுத்த வாக்குறுதிகளில் 40 மட்டுமே பரிசீலனையில் உள்ளன: அமைச்சர் தங்கம் தென்னரசு

ஓ.பி.எஸ்., டி.டி.வி. தினகரன், சசிகலாவை ஒருங்கிணைக்க செங்கோட்டையன் திட்டமா? புதிய அதிமுக உதயம்?

டிரம்பிடம் இந்தியாவுக்கு 50% வரி போட சொன்னதே பிரதமர் மோடி தான்: ஆ ராசா

அடுத்த கட்டுரையில்
Show comments