Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் கடும் வெயில்: பொதுமக்கள் வெளிய வர வேண்டாம்.. பொது சுகாதாரத்துறை எச்சரிக்கை..!

Siva
ஞாயிறு, 10 மார்ச் 2024 (11:27 IST)
சென்னை உள்பட தமிழகத்தில் இன்று கடும் வெயில் அடிக்கும் என்பதால் காலை 11 மணி முதல் மதியம் 3.30 மணி வரை பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் என்று பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம் தெரிவித்துள்ளார் 

கோடை காலம் தொடங்கி உள்ளதை அடுத்து தமிழகத்தில் வரும் நாட்களில் கடும் வெயில் அடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் எனவே 100 டிகிரிக்கு மேல் வெயில் அடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது 
 
எனவே காலை 11:00 மணி முதல் 3 மணி வரை பொதுமக்கள் அவசிய தேவை இருந்தால் மட்டுமே வெளியே வரவேண்டும் என்றும் குறிப்பாக குழந்தைகள் முதியோர் கர்ப்பிணிகள் நண்பகல் நேரத்தில் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது 
 
மேலும் செயற்கை குளிபானங்கள், மது அருந்துதல், புகை பிடித்தல் ஆகியவற்றை தவிர்த்து எலுமிச்சை ஜூஸ், இளநீர், மோர், பழச்சாறுகள் அதிகம் குடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது 
 
மேலும் நல்ல காற்றோட்டம் மற்றும் குளிர்ந்த இடங்களில் இருப்பது நல்லது என்றும் பருத்தி ஆடைகளை மட்டுமே அணிய வேண்டும் என்றும் அறிவுரையாக கூறப்பட்டுள்ளது. 
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே ஸ்கூட்டியில் 7 சிறுவர்கள் சாகசம்.. ஸ்கூட்டி ஓனருக்கு அபராதம்.. பெற்றோருக்கு எச்சரிக்கை!

அல்-கொய்தா அமைப்புடன் தொடர்புடைய பெண் பெங்களூருவில் கைது: குஜராத் ஏடிஎஸ் அதிரடி நடவடிக்கை!

மரணம் என் வாழ்க்கையின் மிக அழகான பகுதி.. 25 வயது சிஏ அக்கவுண்டண்ட் தற்கொலை..!

தென்மாவட்டங்களை சாதிய வன்கொடுமை பகுதிகளாக அறிவிக்க வேண்டும்! - பா.ரஞ்சித் கோரிக்கை!

Election Fever: மீண்டும் தமிழகம் வரும் மோடி! நடராஜர் கோயிலில் இருந்து மன் கீ பாத்!

அடுத்த கட்டுரையில்
Show comments