Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தவறுதலாக வங்கி கணக்குகளில் ரூ.13 கோடி வரவு! – இன்ப அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

தவறுதலாக வங்கி கணக்குகளில் ரூ.13 கோடி வரவு! – இன்ப அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
, ஞாயிறு, 29 மே 2022 (15:51 IST)
சென்னையில் செயல்பட்டு வரும் எச்டிஎப்சி வங்கி கிளையிலிருந்து வாடிக்கையாளர்கள் வங்கி கணக்குகளில் தவறுதலாக ரூ.13 கோடி வரவான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை தி.நகரில் உள்ள பர்கிட் சாலையில் எச்டிஎப்சி வங்கியின் கிளை செயல்பட்டு வருகிறது. இந்த கிளை வங்கியிலிருந்து 100 வாடிக்கையாளர்களின் வங்கி கணக்குகளுக்கு ரூ.13 கோடி அளவில் பணம் திடீரென வரவு வைக்கப்பட்டுள்ளது.

இதை கண்ட வங்கி வாடிக்கையாளர்கள் இன்ப அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். தவறை கண்டறித்த வங்கி கிளை உடனடியாக சம்பந்தபட்ட வங்கி கணக்குகளை முடக்கியுள்ளது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக பணம் வங்கி கணக்குகளில் வரவானதா என அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இதைத்தான் நாங்க NRCன்னு சொன்னோம்: தமிழக அரசுக்கு பதிலடி கொடுக்கும் நெட்டிசன்ஸ்