கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலை.. 35 நாட்களில் 5 கொலை செய்த மாற்றுத்திறனாளி..!

Mahendran
புதன், 27 நவம்பர் 2024 (12:31 IST)
கல்லூரி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தது உள்பட 35 நாட்களில் 5 பேர்களை கொலை செய்த மாற்றுத்திறனாளி கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

குஜராத் மாநிலத்தில் 19 வயது கல்லூரி மாணவி ஒருவர் தனது வீட்டிற்கு திரும்பி கொண்டு இருந்தபோது, அவரை பின் தொடர்ந்து வந்தார் ராகுல் என்ற மாற்றுத்திறனாளி  திடீரென வழி மறைத்து பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்தார்.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் சுமார் 2000 சிசிடிவி வீடியோக்களை ஆய்வு செய்து அதன் பின் ராகுலை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் 35 நாட்களில் 5 கொலை செய்ததாக வெளியாகியிருக்கும் தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மாற்றுத்திறனாளி என்பதை பயன்படுத்தி பல ரயில்களில் அவர் பயணம் செய்த ராகுல், கடந்த 19ஆம் தேதி 60 வயது முதியவரை கொலை செய்து, அவரிடம் இருந்த பணம் பொருட்களை கொள்ளை அடித்துள்ளார்.

அதேபோல், கடந்த அக்டோபர் மாதம் புனே ரயிலில் பயணம் செய்த போது ஒரு பெண்ணை கொலை செய்து, அவரிடம் இருந்த பணம் நகைகளை கொள்ளை அடித்துள்ளார்.

கடந்த மாதம் 25ஆம் தேதி பெங்களூர் ரயிலில் மாற்றுத்திறனாளி பெட்டியில் பயணம் செய்த ராகுல், சக பயணி ஒருவரை கொலை செய்துவிட்டு தப்பி உள்ளார். கைது நடவடிக்கைக்கு முந்தின நாள் கூட, தெலுங்கானாவில் உள்ள ரயில் நிலையத்தில் பெண் ஒருவரை கொலை செய்து, அவரிடமிருந்த பணம் நகைகளை திருடி உள்ளார்.

35 நாட்களில் ஐந்து கொலைகளை ஈடுபட்ட ராகுல், இடம் இருந்து பணம் மற்றும் நகைகளை பறிமுதல் செய்ததாகவும், அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.



Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

6 மாதமாக டிஜிட்டல் அரெஸ்டில் இருந்து பெண் மென்பொருள் பொறியாளர்.. ரூ.32 கோடி இழப்பு..!

தென்மேற்கு வங்கக்கடலில் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி.. கனமழை எச்சரிக்கை..!

முதல்வர் ஸ்டாலின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்.. 13 திரையுலக பிரபலங்கள் வீடுகளுக்கும் மிரட்டல்..!

தமிழகத்தில் தேர்தல் பணிகள் முடக்கம்: வாக்காளர் பட்டியல் திருத்த பணியை புறக்கணிக்க வருவாய்த்துறை முடிவு!

லாலு பிரசாத் யாதவ் வீட்டில் குடும்ப சண்டை.. வீட்டை விட்டு வெளியேறிய 4 மகள்கள்..!

அடுத்த கட்டுரையில்