Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வைகோவை அரசியலில் இருந்து அப்புறப்படுத்துவோம்: எச்.ராஜா

Webdunia
செவ்வாய், 4 டிசம்பர் 2018 (21:14 IST)
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கடந்த சில மாதங்களாக மத்தியில் ஆட்சி செய்து வரும் பாஜகவை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். குறிப்பாக பிரதமர் மோடியை தமிழகத்திற்குள் நுழைய விடமாட்டோம் என்று சூளுரைத்து வருகிறார்.

இந்த நிலையில் அரசியல் களத்திலிருந்து வைகோவை அப்புறப்படுத்த வேண்டும் என மிக காட்டமாக தனது டுவிட்டர் பக்கத்டில் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா பதிவு செய்துள்ளார். அவர் இதுகுறித்து மேலும் கூறியதாவது:

"மாண்புமிகு பிரதமர் மோடிஜி அவர்களையும், மேதகு ஆளுநர் அவர்களையும் வைகோ அவர்கள் அநாகரிகமாக பேசியுள்ளதை வன்மையாக கண்டிக்கிறேன். ஆங்கிலேய கிறித்தவ ஏகாதிபத்தியத்தின் புரோக்கராக இருப்பவர், ஆளுநரை புரோக்கர் என்கிறார். இந்த வெட்கம் கெட்ட கும்பலை அரசியல் களத்திலிருந்து அப்புறப்படுத்த உறுதியேற்போம்" என பதிவு செய்துள்ளார்.

எச்.ராஜாவின் இந்த பதிவுக்கு ஆதரவும் ஏதிர்ப்பும் தெரிவித்து பலர் கமெண்ட் செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

சஹாரா க்ரூப்ஸை குறிவைத்த Scam 2010 வெப் சிரிஸ்! – வழக்கு தொடர்வோம் என எச்சரிக்கை!

கூட்ட நெரிசலில் இறந்தாரா? கொலையா? செண்ட்ரல் வந்த ரயிலில் அழுகி கிடந்த ஆண் சடலம்!

சென்னையின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை.. மகிழ்ச்சியில் பொதுமக்கள்..!

குடிநீர் தொட்டியில் மாட்டு சாணம் கலந்த விவகாரம்: சிபிசிஐடி வழக்குப்பதிவு

ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான ஈரான் அதிபர் என்ன ஆனார்? 12 மணி நேரமாக மீட்பு பணி..!

அடுத்த கட்டுரையில்
Show comments