Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிவகெங்கையை சிதம்பரம் குடும்பத்திடம் இருந்து மீட்க வேண்டும்: எச்.ராஜா

Mahendran
செவ்வாய், 26 மார்ச் 2024 (14:17 IST)
சிவகெங்கையை சிதம்பரம் குடும்பத்திடம் இருந்து மீட்க வேண்டும் என பாஜக பிரமுகர் எச் ராஜா செய்தியாளரக்ளிடம் தெரிவித்தார் 
 
இன்று சிவகங்கைக்கு தேர்தல் பிரச்சாரத்திற்காக வந்த எச் ராஜா, கார்த்திக் சிதம்பரம் மீது சீனாவுக்கு விசா வாங்கி கொடுத்த வழக்கு இருப்பதாகவும் அந்த வழக்கின் தீர்ப்பு விரைவில் வெளிவரும் என்று தெரிவித்தார் 
 
சிவகங்கை பாஜக வேட்பாளர் ஆந்திராவை சேர்ந்தவர் என கார்த்திக் சிதம்பரம் கூறுவது அகம்பாவத்தின் உச்சம் என்றும் சிவகெங்கையை சிதம்பரம் குடும்பத்திலிருந்து மீட்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார் 
 
எய்ம்ஸ் மருத்துவமனை தாமதத்திற்கு திராவிட அரசுகள் தான் காரணம் என்றும் தற்போது வேலை தொடங்கிவிட்டது என்றும் இனி உதயநிதி வைத்திருக்கும் செங்கல் மண்ணோடு மண்ணாகி போய்விடும் என்றும் அவர் கூறினார் 
 
சிவகங்கை தொகுதியில் 40 ஆண்டுகளாக ஒரே குடும்பத்தின் பிரதிநிதிகள் இருந்தும் ஒரு தொழிற்சாலை கூட கொண்டு வரவில்லை என்றும் இங்கு உள்ள ஏராளமான இளைஞர்கள் வெளிநாடுகளுக்கும் வெளி மாநிலங்களுக்கும் வேலை தேடி சென்று விட்டனர் என்றும் அவர் கூறினார். 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராஜபாளையம் தொகுதியில் போட்டியிடுகிறாரா நடிகை கவுதமி.. அவரே அளித்த பேட்டி..!

தலைவா வா..! ராணுவத்திலிருந்து திரும்பிய BTS குழு.. Purple மயமான தென் கொரியா!

ராஜ்ய சபா தேர்தல் வேட்புமனு தாக்கல் நிறைவு.. போட்டியின்றி தேர்வாகும் 6 தமிழக எம்பிக்கள்..!

மேகாலயா முதல்வர் பொய் சொல்கிறார், என் மகள் அப்பாவி.. இந்தூர் சோனம் தந்தை பேட்டி..!

சிக்கிம் மாநிலத்திற்கு ஹனிமூன் சென்ற உபி தம்பதியை காணவில்லை.. அதிர்ச்சியில் உறவினர்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments