Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிவகெங்கையை சிதம்பரம் குடும்பத்திடம் இருந்து மீட்க வேண்டும்: எச்.ராஜா

Mahendran
செவ்வாய், 26 மார்ச் 2024 (14:17 IST)
சிவகெங்கையை சிதம்பரம் குடும்பத்திடம் இருந்து மீட்க வேண்டும் என பாஜக பிரமுகர் எச் ராஜா செய்தியாளரக்ளிடம் தெரிவித்தார் 
 
இன்று சிவகங்கைக்கு தேர்தல் பிரச்சாரத்திற்காக வந்த எச் ராஜா, கார்த்திக் சிதம்பரம் மீது சீனாவுக்கு விசா வாங்கி கொடுத்த வழக்கு இருப்பதாகவும் அந்த வழக்கின் தீர்ப்பு விரைவில் வெளிவரும் என்று தெரிவித்தார் 
 
சிவகங்கை பாஜக வேட்பாளர் ஆந்திராவை சேர்ந்தவர் என கார்த்திக் சிதம்பரம் கூறுவது அகம்பாவத்தின் உச்சம் என்றும் சிவகெங்கையை சிதம்பரம் குடும்பத்திலிருந்து மீட்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார் 
 
எய்ம்ஸ் மருத்துவமனை தாமதத்திற்கு திராவிட அரசுகள் தான் காரணம் என்றும் தற்போது வேலை தொடங்கிவிட்டது என்றும் இனி உதயநிதி வைத்திருக்கும் செங்கல் மண்ணோடு மண்ணாகி போய்விடும் என்றும் அவர் கூறினார் 
 
சிவகங்கை தொகுதியில் 40 ஆண்டுகளாக ஒரே குடும்பத்தின் பிரதிநிதிகள் இருந்தும் ஒரு தொழிற்சாலை கூட கொண்டு வரவில்லை என்றும் இங்கு உள்ள ஏராளமான இளைஞர்கள் வெளிநாடுகளுக்கும் வெளி மாநிலங்களுக்கும் வேலை தேடி சென்று விட்டனர் என்றும் அவர் கூறினார். 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சட்டசபையில் மாநில சுயாட்சி தீர்மானம்.. அதிமுக, பாஜக எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு..!

ராஜேந்திர பாலாஜிக்கு எதிரான வழக்கு: ஆளுநர் எடுத்த நடவடிக்கையால் அதிமுகவில் பரபரப்பு..!

தொடங்கிய மீன்பிடித்தடைக்காலம்.. திரும்பி வந்த படகுகள்! எகிறும் மீன் விலை!

அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு நடந்து சென்று ஆஜரான பிரியங்கா காந்தி கணவர்.. என்ன காரணம்?

8ஆம் வகுப்பு மாணவனுக்கு அரிவாள் வெட்டு.. நெல்லையில் பயங்கர சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments