Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பராசக்தி இப்போது வெளியானால்? -ப.சிதம்பரத்திற்கு ஹெச்.ராஜா பதில்

Webdunia
சனி, 21 அக்டோபர் 2017 (11:38 IST)
மெர்சல் படத்தில் நடிகர் விஜய் ஜி.எஸ்.டி பற்றி பேசிய சில வசனங்கள் பாஜகவினரை கொதிப்படைய செய்துள்ளது. 


 

 
தமிழிசை சவுந்தரராஜன், பொன்.ராதாகிருஷ்ணன், ஹெச்.ராஜா போன்றோர் விஜய்க்கு எதிராக கருத்து தெரிவித்து வருகின்றனர்.  அதைத் தொடர்ந்து படத்தில் இடம்பெற்ற ஜி.எஸ்.டி குறித்த வசனங்களை நீக்க முடிவெடுத்திருப்பதாக படத்தின் தயாரிப்புக் குழு அறிவித்தது. மேலும், தணிக்கை குழுவினரை தாக்கி எஸ்.வி.சேகர் உள்ளிட்டோர் கருத்து தெரிவித்தனர். 
 
இந்நிலையில் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் தனது டிவிட்டர் பக்கத்தில் “திரைத்துறையினருக்கு ஒரு செய்தி; சட்டம் வந்துகொண்டிருக்கிறது.  இனிமேல் நீங்கள் அரசின் திட்டங்களை பாராட்டி டாக்குமெண்டரி படங்கள் மட்டுமே எடுக்க முடியும்” என கிண்டலாக குறிப்பிட்டுள்ளார். 
 
மேலும், மெர்சலில் சில வசனங்களை நீக்க சொல்லி பாஜக கேட்கிறது. வசனங்களில் புரட்சி படைத்த பராசக்தி படம் தற்போது வெளியானால் என்னவாகும் என யோசித்து பாருங்கள் எனவும் அவர் கருத்து தெரிவித்திருந்தார்.
 
இந்நிலையில், அதற்கு தனது டிவிட்டர் பக்கத்தில் பதிலடி கொடுத்துள்ள ஹெச்.ராஜா “ திரு.ப.சிதம்பரம் அவர்களே! இன்று பராசக்தி படம் வெளியானால் கோவில்கள் கொள்ளையர்கள் கூடாரம் ஆகக்கூடாது என்று  அரசை கேவிலிலிருந்து மக்கள் வெளியேற்றுவர்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments