Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ராம்குமாருக்கு பின்னால் யாரோ இருக்கிறார்கள் : ஹெச். ராஜா அதிரடி

ராம்குமாருக்கு பின்னால் யாரோ இருக்கிறார்கள் : ஹெச். ராஜா அதிரடி
, செவ்வாய், 5 ஜூலை 2016 (11:06 IST)
சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ராம்குமாரின் பின்னணியில் யாராவது இருக்கிறார்களா என்று போலீசார் விசாரணை செய்ய வேண்டும் என்று பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கருத்து தெரிவித்துள்ளார்.


 

 
திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர் “சுவாதி கொலை வழக்கில், ராம்குமார் என்ற குற்றவாளி கைது செய்யப்பட்டிருப்பதை நாங்கள் வரவேற்கிறோம். இது போலீசாரிடன் துரித நடவடிக்கை. 
 
ஆனால், இந்த கொலையில் ராம்குமாருக்கு மட்டும் தொடர்பு இருப்பதாய் நான் நம்பவில்லை. அவர் கைது செய்யப்பட்ட விதம், இடம் ஆகியவை சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. அவருக்கு பின்னால் வேறு யாரவது இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.
 
சுவாதி வழக்கில் இன்னும் பல மர்மங்கள் அடங்கியுள்ளது. ராம்குமாரை கருவியாக யாரேனும் பயன்படுத்தி உள்ளனரா?, உண்மையிலேயே சுவாதி தன்னுடைய காதலை ஏற்கததால்தான் ராம்குமார் கொலை செய்தாரா? அல்லது வேறு யாருக்கா செய்தாரா? என்பது பற்றி போலீசார் விரிவான விசாரணை நடத்த வேண்டும்.
 
அதுபோல், ஊடகங்களிலும் ராம்குமார் கைதுபற்றி  பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்படுகிறது. எல்லாவற்றுக்கும் காவல்துறை விளக்கம் அளிக்க வேண்டும்” என்று கூறினார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கழுத்து வெட்டப்பட்டு நிர்வாணமாக ஒரு பெண் உடல் கண்டெடுப்பு