Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடுத்து தமிழகத்தில் பாஜகவின் சர்க்கார்தான்! – எச்.ராஜா நம்பிக்கை!

Webdunia
வியாழன், 30 ஜனவரி 2020 (14:28 IST)
அடுத்த சட்டமன்ற தேர்தலின் மூலம் பாஜக தமிழகத்தில் ஆட்சியை பிடிக்கும் என எச்.ராஜா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்தம் குறித்து மக்களுக்கு புரிய செய்ய மாநில பாஜகவினர் பல இடங்களில் குடியுரிமை சட்ட விளக்க விழிப்புணர்வு பொதுக்கூட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தேனி மாவட்டம் பெரியக்குளம் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா பேசினார்.

அப்போது அவர் ”குடியுரிமை மசோதாவால் யாரையும் வெளியேற்ற போவதில்லை. 11 வருடங்களுக்கும் மேலாக இந்தியாவில் வாழ்வோருக்கு இந்த சட்டத்தால் எந்த பிரச்சினையும் இல்லை. புதிதாக வரும் மற்றவர்களுக்காகதான் இந்த மசோதா செயல்படுத்தப்படுகிறது” என்று கூறியுள்ளார்.

மேலும் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் ஏற்கனவே இந்த சட்டம் மூன்று முறை திருத்தி அமைக்கப்பட்டதாகவும், பாஜக அரசு மக்கள் நலனுக்காக ஒரேயொரு முறை திருத்தியுள்ளதாகவும் கூறியுள்ள அவர் அடுத்த சட்டமன்ற தேர்தலில் பாஜக தமிழகத்தில் கண்டிப்பாக ஆட்சியமைக்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments