தனியார் ஆம்னி பேருந்தில் சென்னைக்கு கடத்தப்பட்ட 400 கிலோ குட்கா: 3 பேர் கைது

Webdunia
வியாழன், 4 ஆகஸ்ட் 2022 (19:30 IST)
தனியார் ஆம்னி பேருந்தில் பெங்களூரில் இருந்து 400 கிலோ குட்கா போதைப்பொருள் சென்னைக்கு கடத்தி வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகள் வெளிமாநிலங்களில் இருந்து குட்கா போதைப்பொருள் கடத்தப்பட்டு வருகின்றன. இதனை அடுத்து காவல்துறையினர் தீவிர பரிசோதனை செய்து பல ஆயிரக்கணக்கான கிலோ போதைப்பொருள் பறிமுதல் செய்து வருகின்றனர் 
 
அந்த வகையில் பெங்களூரில் இருந்து தனியார் ஆம்னி பேருந்தில் சென்னைக்கு கடத்தி வரப்பட்ட 400 கிலோ குட்கா போதைப் பொருள் இன்று பறிமுதல் செய்யப்பட்டது. இந்த போதை பொருளை கடத்தி வந்த மாதவரம் பகுதியை சேர்ந்த செல்வராஜ் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களிடம் காவல்துறையினர் விசாரணை செய்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன
 
மேலும் ஆம்னி பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர் ஆகியோர்களிடமும் விசாரணை செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதலமைச்சரை தவிர அனைத்து அமைச்சர்களும் ராஜினாமா.. புதிய அமைச்சர்கள் நாளை பதவியேற்பு..!

பிரதமர் மோடி பொதுக்கூட்ட இடத்தில் மின்சாரம் தாக்கி சிறுவன் பலி.. ஆந்திராவில் சோகம்..!

4 கிலோ தங்கம், 7 கிலோ வெள்ளி, ரூ.1 கோடிக்கும் மேல் ரொக்கம்.. ஓய்வு பெற்ற அதிகாரி வீட்டில் சோதனை.!

திமுக-வின் ஃபெயிலியர் ஆட்சிக்கு முடிவுரை.. தமிழ்நாட்டில் மீண்டும் அதிமுகவின் பொற்கால ஆட்சி: ஈபிஎஸ்

மேற்கு தொடர்ச்சி மலையில் கனமழை: சதுரகிரி மலை ஏறுவதற்கு தடை.. பக்தர்கள் அதிருப்தி..!

அடுத்த கட்டுரையில்
Show comments